பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலை நோக்கு மற்றும் வாடிக்கையாளர் வசதிகளை மேம்படுத்துவதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், காஸ் சிலிண்டர் ரீபில் பதிவு செய்ய, 'மிஸ்டு கால்' வசதியை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுக்க உள்ள வாடிக்கையாளர்கள், 8454955555 எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். நாம் எந்த ஏஜன்சியில் இணைப்பு வைத்திருக்கிறோமோ, அந்த ஏஜன்சியில், நமக்கு தேவையான காஸ் ரீபில் சிலிண்டர் பதிவாகிவிடும்.
அதற்கான தொகையை செலுத்த, வாடிக்கையாளர்கள், பாரத் பில் பேமென்ட் சிஸ்டம், இந்தியன் ஆயில் ஒன் ஆப் என்ற செயலி மூலமாக அல்லது, https://cx.indianoil.in என்ற இணைய முகவரி மூலமாக, பதிவு செய்து செலுத்தலாம்.வாட்ஸ்அப் எண் 758888882 மூலமாக, எஸ்.எம்.எஸ். / ஐ.வி.ஆர்.எஸ்., மூலம் இந்த எண்ணை பயன்படுத்தி, 7718955555 வாடிக்கையாளர்கள் பதிவு செய்தும், தொகையை செலுத்தலாம்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன தலைவர் வைத்யா கூறுகையில், ''நேற்றைய தொழில்நுட்பத்தைவிட, இன்று சிறப்பானதை வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டும் என்ற நோக்கில், புதிய தொழில்நுட்பம் சார்ந்த புத்தம் புது வசதிகளை, வழங்கி வருகிறோம். இந்த மிஸ்டு கால் வசதி என்பது, எல்.பி.ஜி. சிலிண்டர்களை எளிதாக பெறுவதற்கு, முக்கியமான பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment