தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து 30-ந்தேதி முடிவு - EDUNTZ

Latest

Search here!

الخميس، 16 سبتمبر 2021

தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் திறப்பு குறித்து 30-ந்தேதி முடிவு

திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், சிலர் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 

அந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதல்-அமைச்சருக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் பள்ளி திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். வருகிற 30-ந்தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனை மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் பள்ளி திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق