விருந்து முடிந்ததும் வெற்றிலை மெல்லும் பழக்கம் இந்தியாவில் இருந்து வருகிறது. வெற்றிலை செரிமானதுக்கு மட்டுமல்ல பல சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வெற்றிலை சிறந்த தீர்வு.
பொடுகுகிற்கு: பொடுகு பிரச்சனை உள்ளவர்கள் வெற்றிலையை அரைத்து அதில் பச்சை கற்பூரம், துளசி இலைசேர்த்து தலையில் தேய்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனை தீரும்.
முகப்பரு: வெற்றிலையுடன் மஞ்சள் அரைத்து முகப்பருக்களின் மீது தடவி வர பருக்கள் விரைவில் மறைந்து விடும்.
வியர்வை நாற்றம்: வியர்வை நாற்றம் இருந்தால் வெற்றிலைகளை நீரில் கொதிக்க வைத்து குளிக்கும் நீருடன் கலந்து விட்டவும். இப்படி செய்து வர வியர்வை நாற்றம் முற்றிலும் குறையும்.
துணிகள் துவைக்கும் போது வெற்றிலை கொதிக்கவைத்த நீரில் முக்கி எடுத்து அதனை உலர்த்தினால் துணிகளிலும் வியர்வை நாற்றம் போய்விடும்.
No comments:
Post a Comment