திருவண்ணாமலை ஓதுவார் பயிற்சி பள்ளியில், மூன்றாண்டு சான்றிதழ் படிப்பில் சேர, அக்., 27வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களில், ஓதுவார் பயிற்சி பள்ளி நடந்து வருகிறது. ஹிந்து மதத்தைச் சேர்ந்த, 13 வயது நிரம்பிய, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.இதற்கு, பெற்றோர், பாதுகாவலர் ஒப்புதல் வேண்டும்.
சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வு பெறுவோருக்கு, இலவச உணவு, சீருடை, பயிற்சி காலத்தில் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
விருப்பமுள்ளோர் ஹிந்து சமய அறநிலையத்துறையின், www.tnhrce.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, செயல் அலுவலர், அருணாசலேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை - 606601 என்ற முகவரிக்கு, அக்., 27க்குள் அனுப்ப வேண்டும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment