செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு
2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருக்கும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3-ம் தேதி ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தது.
அந்தவகையில் 2010 முதல் 2019 வரையிலான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் இன்று (செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளது.
படிக்க | ஊரக உள்ளாட்சித் தேர்தல்: 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2010-ம் ஆண்டுக்கான விருது முனைவர் வீ.எஸ்.ராஜம்
2011-ம் ஆண்டு பேராசிரியர் பொன். கோதண்டராமன்
2012-ம் ஆண்டு விருது பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி
2013-ம் ஆண்டு பேராசிரியர் ப.மருதநாயகம்
2014-ம் ஆண்டு பேராசிரியர் கு.மோகனராசு
2015-ம் ஆண்டு பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
2016-ம் ஆண்டு பேராசிரியர் கா.ராஜன்
2017-ம் ஆண்டு பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்
2018-ம் ஆண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன்
2019-ம் ஆண்டு பேராசிரியர் கு.சிவமணி
ஆகியோருக்கு செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment