இன்று முதல் | 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் - EDUNTZ

Latest

Search here!

Monday 4 October 2021

இன்று முதல் | 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (அக். 4) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

கரோனா பரவல் காரணமாக 2020-21-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப் பட்டது.

மதிப்பெண் கணக்கீட்டில் நிலவும் குழப்பங்களைத் தவிர்க்க, சான்றிதழில் தேர்ச்சி மட்டும் குறிப்பிட்டு வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவெடுத்தது. அதேநேரம் உயர்கல்வி சேர்க்கைக்கு 9-ம் வகுப்பு மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. 

 தேர்வுத் துறை இயக்குநர் தகவல் 

 இந்நிலையில், 10-ம் வகுப்புக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை, பள்ளி மாணவர்கள் இன்று (திங்கள்கிழமை) காலை 10 மணி முதல், தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 

 சமூக இடைவெளி அவசியம் 

 இதற்காக பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளி உட்பட கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment