வகுப்பறையில் பார்வையற்ற ஆசிரியர் முன் நடனமாடிய, மூன்று மாணவர்கள் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பதாம் வகுப்பில் பார்வையற்ற வரலாறு பாட ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது இரண்டு மாணவர்கள் சினிமா பாடலுக்கு நடனமாட, ஒரு மாணவர் மொபைல்போனில் பதிவு செய்துள்ளார். ஆசிரியர் அமைதிப்படுத்த முயன்றும், கண்டு கொள்ளாமல் ஆட்டம் போட்டனர். வீடியோ எடுத்த மாணவர், வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டதால் வைரலானது. இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது
No comments:
Post a Comment