எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு
நடைமுறைகளை பொது மக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள்
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும்
வகையில், அரசு ஆணை எண்.631, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை,
நாள் 05.10.2021-ன்படி, 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய
ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத்
தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்,
அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும்,
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில்
13-10-2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் அடிப்படையில், பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக்
காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக்
கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும்,
மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும்
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று
பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக
கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கனவே செயல்பட
அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக்
கடைகள்,
உணவகங்கள் மற்றும்
அடுமனைகள் இரவு 11.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு
உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு
அனுமதி
அளிக்கப்படுகிறது.
அதே போன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள் (Tuition Centres), அரசு
மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட
அனுமதிக்கப்படுகிறது.
மேலும், பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி
அளிக்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு
முகாம்கள் நடத்தலாம்
1
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் (Private Exhibitions)
உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி
செயல்படலாம்
-
மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் ((LKG,
UKG),
அங்கன்வாடி பள்ளிகள்
முழுமையாக
செயல்படலாம்.
காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி
செலுத்தியிருக்க வேண்டும்,
- ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு
அனுமதி
- திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள்
பங்குபெற அனுமதி
- இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி
ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய
கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும்
கலாச்சாரநிகழ்வுகளுக்கு
நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
கை
பொது:-
கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும்
பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட முக்கிய நிலையான
வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
-
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில்
சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக
வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு
பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).
- கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம்
முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
- அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு,
கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே
நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும்
போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான
இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
2
நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்
நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த்
தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல்,
சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த்
தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-
Appropriate Behaviour)
கோட்பாடுகளை கண்டிப்பாக
நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த்
தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க்
கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level)
வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி,
தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும்
உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.
வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு
மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு
பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை,
வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம்
விதிக்கப்படும்.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரே நேரத்தில், ஒரே
இடத்தில்
அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதை தடுக்க தேவையான அனைத்து
நடவடிக்கைகளை மாவட்ட நிருவாகம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி
அமைப்புகள் மற்றும் காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
பண்டிகைக் காலங்களில், பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனத்துடன்
இருக்குமாறும், கூட்டம் கூடக்கூடிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும்,
பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை
தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அரசின் அனைத்து முயற்சிகளுக்கும்
ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து வணிக
.
. நிறுவனங்களும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை தவறாது கடைபிடிக்க வேண்டும்
எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9
Post a Comment