தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 142/«1/2021 நாள். 10.2021 

பொருள் 

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் 2021 - தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்/ஆசியரல்லா பணியாளர்களுக்கு பணிமேல் விடுப்பு (Leave on duty) அளித்தல் சார்பு 

பார்வை 

1. அரசாணை (நிலை) எண். 121, ஊாக பஞ்சாயத்துராஜ். துறை நாள். 28.09.2021) அவர்களின் 
2. மாநில தேர்தல் ஆணைய செயலாளர், கடித.2986/2021-2 /ஊதே1, நாள். 01.10.2021 
3. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி அறிவுரைகள்

 09.10.2021 ல் தருமபுரி மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறதோ, அந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பார்வையில் கண்ட அரசாணை மற்றும் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் அவர்களின் ஆணையின்படி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,. 

மேற்படி வாக்கெடுப்பு பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள், மற்றும் அன்றைய நாளில் வாக்களிக்க தகுதி உள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தேர்தல் நாளன்று தங்கள் வாக்குரிமையை பதிவு செய்வதற்கு ஏதுவாக பணிமேல் விடுப்பு (Leave on duty) அளிக்கப்படுகிறது. 

மேலும் அன்றைய தினம் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 

முதன்மைக் கல்வி அலுவலர், தருமபுரி 

பெறுநர் 

அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், 
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர்கள், 
தருமபுரி/பாலக்கோடு அரூர் (உரிய நடவடிக்கையின் பொருட்டு) 

நகல் 

மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post

Search here!