மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் 

மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு நர்சுகள், சுகாதார பணியாளர்கள் 7 ஆயிரம் பேர் விரைவில் தேர்வு செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மக்களை தேடி மருத்துவம் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன்பெற்று உள்ளனர். 

இந்த நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்கு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், புதிதாக நர்சுகள், சுகாதார பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் 4 ஆயிரத்து 848 நர்சுகள், 2 ஆயிரத்து 448 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 296 பேரை பணியில் அமர்த்திக் கொள்வதற்கான அரசாணை நேற்று (நேற்று முன்தினம்) வெளியிட்டப்பட்டு உள்ளது. விரைவில் அவர்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். 

ஏற்கனவே கடந்த 1½ ஆண்டு காலமாக கொரோனா பணியில் 4 ஆயிரத்து 570 நர்சுகள் மற்றும் 1,646 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பணியிடங்கள் இவர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து eduntzகோரிக்கை விடுத்து வந்தனர். அனைவரையும் நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. இருந்தாலும், கொரோனா காலத்தில் அவர்கள் பணியாற்றிய காரணத்தினால் கருணை அடிப்படையில் அவர்கள் அனைவருக்கும் கூடுதலாக 20 மதிப்பெண்கள் கொடுப்பது என முடிவெடுக்கப்பட்டு உள்ளது. 

 புதிதாக ஏற்படுத்தப்பட்டு உள்ள நர்சுகள், சுகாதார பணியாளர் பணியிடங்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் நிரப்பட இருக்கிறது. எனவே யாரும் எந்த ஒரு இடைத்தரகரையும் நம்ப வேண்டாம். இதில் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் பணி நியமனங்கள் இருக்கும். மக்கள் நல்வாழ்வுத்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, ஏற்கனவே இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை முதல்அமைச்சர் அறிவித்தார். 

இந்த நிலையில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ‘நம்மை காக்கும் 48’ என்ற புதிய திட்டம் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையால் செயல்படுத்தப்பட இருக்கிறது. நம்மை காக்கும் 48 திட்டம் அடுத்த மாதம் நம்மை காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 609 அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சமாக, தமிழக நெடுஞ்சாலைகளில், விபத்து நிகழ்கிறபோது, எந்த நாட்டை சார்ந்தவராக இருந்தாலும், எந்த மாநிலத்தை சார்ந்தவராக eduntzஇருந்தாலும், அந்த விபத்தில் அவர் பாதிப்புக்கு உள்ளாகிறார் என்றால், அவருக்கு உடனடியாக ரூ.1 லட்சத்தை தமிழக அரசு செலவிட இருக்கிறது. இது இந்தியாவுக்கே முன் மாதிரியான திட்டம். விபத்துகளுக்காக பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய 124 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இருக்கிறது. 

தற்போது அவை 300 வாகனங்களாக உயர்த்தப்பட இருகிறது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஹாங்காங்கில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!