தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் 'அக்கவுண்ட்ஸ்' நிர்வாக பயிற்சிக்கான இலவச அறிமுக வகுப்பு 24-ந்தேதி நடக்கிறது 


தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மங்கள்யான் தொழில்நுட்ப தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க இருக்கிறது. அந்தவகையில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளை ஞர்களுக்கு உடனடி வேலை வாய்ப்புக்கு அக்கவுண்ட்ஸ் நிர்வாகம், ஜி.எஸ். கணக்குகள் நிர்வாக உதவியாளர் பயிற் சிகளுக்கான அறிமுக வகுப்பு வருகிற 24-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை அம்பத்தூர் மகாகவி பாரதியார் நகர், சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் பயிற்சி வளாகத்தில் நடத் தப்பட உள்ளது. 

இந்த பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதால் பயிற்சியாளர் கள் எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை. பயிற்சி களைதிறம்படமுடிப்பவர்களுக்கு தமிழக அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் நல்ல பணியில் சேருவ தற்கும், சுயதொழில் தொடங்குவதற்கும் பயிற்சி மையங்கள் மூலமாக உதவி செய்யப்படும். அதுமட்டுமல்லாமல், பயிற்சிக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவினையும் தமிழக அரசு வழங்கும். 

இளங்கலை பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்து வேலையற்ற ஆண், பெண் இருபாலரும் இந்த இலவச பயிற் சிகளை பயன்படுத்தி கொள்ளலாம். விண்ணப்பம் தொடர் பான விவரங்களுக்கு 9869041169 என்ற செல்போன் எண் மற்றும் mangalyantwcs@gmail.com மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!