அரசு வழக்குரைஞர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் 

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதி மன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞர் கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.வி ஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது..

சென் னையில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் வழக் குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு சிறப்பு வழக்குரைஞர் பணியிடத்தும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கூடுதல் அரசு வழக்குரைஞர் பணியிடத்துக்கும் தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான விண்ணப்பங்களை www.chennai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி

சென்னை மாவட்ட ஆட்சி யர், 
சிங்காரவேலர் மாளிகை, 
எண்.62 
ராஜாஜிசாலை, 
சென்னை-1 

என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் டிசம்பர் 13-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post

Search here!