அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! - EDUNTZ

Latest

Search here!

Saturday 18 December 2021

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை மாணவர்கள் முறையாக அணிந்து வர வேண்டும் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-06 ந.க.எண்.53550/8/இ1/2021 நாள் . 8 :11.2021 

பொருள் 

பள்ளிக்கல்வி - விலையில்லா சீருடை வழங்கும் திட்டம் - புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இணை சீருடைகள் வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் சார்பான அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக, 

பார்வை : 

1. அரசாணை எண்.64 சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டம் (SW2) துறை நாள்.06.09.2011. 2.Deputy Accountant General ( AMG -1 ) DO No.Prl.AG { Audit - IYAMGI DP Cell/TNOB/AR 2020-21/73 dated 03.11.2021. 3. இவ்ணையரக ந.க.எண்.53550/8/இ1/2021 நாள் . .11.2021

தமிழகத்தில் பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பார்வை 1 இன் காண் அரசாணையின் படி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு 4 இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பார்வை 2 இன் காண் கடிதத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடைகளை பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு முறையாக அணிந்து வருவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்வை 3 இன் காண் செயல்முறையில் அரசு வழங்கும் விலையில்லா சீருடைகளை பெற்றும் அவற்றை பயன்படுத்தாத அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்கள் தினந்தோறும் அரசு வழங்கிய சீருடைகளை அணிந்து வர அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Comments System

[blogger][disqus][facebook]