தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், 75 மயிலாப்பூர், சென்னை -4. 

சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை மூன்று ஆண்டு பயிற்சி வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை விளம்பர அறிவிப்பு இத்திருக்கோயிலில் சைவ வேத ஆகமங்களை பயிற்றுவிக்க சைவ வேத ஆகம பாடசாலை நடந்து வருகிறது. 

இந்த பாடசாலையில் மூன்றாண்டு சைவ வேத ஆகம சான்றிதழ் பயிற்சி பெற விருப்பமுடைய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள் : 

1) மாணவர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். 

2) குறைந்தப்பட்சம் 13 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். 

3) 5ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்று இருத்தல் வேண்டும். 

4) பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் 

5) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்கான இறுதி நாள் : 15.01.2022 

மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பகள் நிபந்தனைகள் இத்திருக்கோயில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டிய முகவரி இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. திருமதி. த. காவேரி, திரு. பி. விஜயகுமார் ரெட்டி இணை ஆணையர்/செயல் அலுவலர் தக்கார். செ.ம.தொ.இ/1195/வரைகலை/2021 சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம்


Post a Comment

Previous Post Next Post

Search here!