10, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கும் மீண்டும் 'ஆன்லைன்' வகுப்பு?



பொங்கல் பண்டிகைக்கு பின், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் 'ஆன்லைன்' வகுப்புகளை நடத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தமிழகத்தில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உட்பட, ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப் பட்டுள்ளன.மேலும், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!