தொழிலாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை எடுக்க விரும்புபவர்களுக்காக, குறைதீர்க்கும் முகாம் (பென்சன் அதாலத்) சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணிக்கு ஆன்லைன் (இணையவழி) முறையில் நடத்துகிறது. 

சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை பெற்ற ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய ஓய்வூதியம் தொடர்பான குறைகளை pension.rochn1@epfindia.gov.in என்ற இணையதள முகவரியில் 'பென்சன் அதாலத்' என்று தலைப்பிட்டு அனுப்பி, பதிவு செய்யவேண்டும். 

இவ்வாறு அனுப்புபவர்கள் தங்களுடைய பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண், தொலைபேசி எண், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை உள்ளிட்ட விவரங்களை குறிப்பிடவேண்டும். இணையவழியில் நடக்கும் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்துகொள்வதற்கான ‘லிங்க்' அதாவது இணையவழி இணைப்பு, ஓய்வூதியதாரர்கள் கொடுத்த இணையதள முகவரிக்கு அல்லது தொலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும். மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!