அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- 

 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்டத்தின் கீழ் படிப்புதவித் தொகை 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு, அவர்களுக்கான தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. 


 இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை 12-ந்தேதி (இன்று) முதல் 27-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து, அவரவர் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வருகிற 27-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!