நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு

தமிழக அரசின், அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையங்களில், மத்திய தேர்வாணையம் நடத்தும், முதல்நிலைத் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

அதில் மாணவர்களை சேர்ப்பதற்காக, வரும், 23ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலை தடுக்க, வரும், 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, அரசு அறிவித்துள்ளது. எனவே, வரும் 23ம் தேதி நடக்கவிருந்த, முதல்நிலைத் தேர்வு பயிற்சி வகுப்புக்கான நுழைவுத் தேர்வு, தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுஉள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!