சென்னை பல்கலையின் பணிகளில் சேர வாய்ப்பு


சென்னை பல்கலையின் பணிகளில் சேர வாய்ப்பு 

சென்னை, பிப். 3- சென்னை பல்கலையின் பதிவாளர், தேர்வு அதிகாரி உள்ளிட்ட ஐந்து முக்கிய பதவிகளை நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட் டுள்ளன. 

சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப் பாட்டு அதிகாரியாக உள்ள பாண்டியனின் பதவிக்காலம் முடிய உள்ளது. பதிவாளர் பதவி யில் பேராசிரியர் மதிவாணன் கூடுதல் பொறுப் பில் உள்ளார். இந்நிலையில், பல்கலையில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, தொலைநிலை கல்வி இயக்குனர், கல்லுாரி மேம்பாட்டு கவுன்சில் முதல்வர், பல்கலை மாணவர் ஆலோசனை அமைப்பின் இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள், வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை, www.unom.ac.in என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!