தினம் ஒரு தகவல் எந்தெந்த நாடுகளில் ரோபோ பயன்பாடு அதிகம்?

ரோபோக்களின் புழக்கம், வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என்றாலும் அது மனிதர்களை ஓரங்கட்டிவிடும் என்ற கருத்தும் உள்ளது. இப்போது நடந்து வரும் மாற்றங்களால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு, ரோபோக்கள் வசமாகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப புரட்சி என்ற போர்வையில் மனிதர்களுக்கு வேலையிழப்பை, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தும் ஒரு உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கை குரலும் ஒலிக்க தொடங்கி உள்ளது. 

இப்போதைய நிலையில் ஆராய்ச்சிகளும், ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது. அதிலும் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்கள். ரோபோக்கள் வருகையால் தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மை. ரோபோக்களை பயன்படுத்துவதால் உற்பத்தி 30 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது. 
உற்பத்தி அதிகரித்தாலும் அதைவாங்க மக்களிடம் பணம் இருக்காது. இது மீண்டும் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும். உலக அளவில் ரோபோக்களின் பயன்பாடு 5 நாடுகளில் அதிகமாக உள்ளது. மொத்தத்தில் 70 சதவீத ரோபோக்களை சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

இதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பேக்கிங் செய்தல், பொருட்களை எடுப்பது, சில்லரை விற்பனை கடைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆபத்தான தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவது, அணுக்கழிவை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலான நாடுகளில் ரோபோக்கள் உபயோகப்படுகின்றன. 

ஆட்டோ மொபைல் துறையில் குறிப்பாக பெயின்ட் அடிப்பது, வெல்டிங் செய்வது உள்ளிட்ட பணிகளிலும் ரோபோக்களின் உபயோகம் அதிக அளவில் உள்ளது.ரோபோக்களின் புழக்கம், வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும் என்றாலும் அது மனிதர்களை ஓரங்கட்டிவிடும் என்ற கருத்தும் உள்ளது. இப்போது நடந்து வரும் மாற்றங்களால் அனைத்து துறைகளிலும் உள்ள மனித உழைப்பு, ரோபோக்கள் வசமாகிவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 

 தொழில்நுட்ப புரட்சி என்ற போர்வையில் மனிதர்களுக்கு வேலையிழப்பை, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தும் ஒரு உலகை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கை குரலும் ஒலிக்க தொடங்கி உள்ளது. இப்போதைய நிலையில் ஆராய்ச்சிகளும், ரோபோ பயன்பாடும் அதிகரிக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 70 லட்சம் பேருக்கு வேலை பறிபோகும் என்று புள்ளிவிவர ஆதாரம் சொல்கிறது. அதிலும் ஆண்களைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்றும் கணித்துள்ளார்கள். 

ரோபோக்கள் வருகையால் தொழில்துறையில் உற்பத்தி அதிகரிக்கும் என்பது உண்மை. ரோபோக்களை பயன்படுத்துவதால் உற்பத்தி 30 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பாங்க் ஆப் அமெரிக்கா கணித்துள்ளது. உற்பத்தி அதிகரித்தாலும் அதைவாங்க மக்களிடம் பணம் இருக்காது. இது மீண்டும் மிகப்பெரிய பொருளாதார தேக்க நிலையை உருவாக்கும். உலக அளவில் ரோபோக்களின் பயன்பாடு 5 நாடுகளில் அதிகமாக உள்ளது. 

மொத்தத்தில் 70 சதவீத ரோபோக்களை சீனா, ஜப்பான், அமெரிக்கா, கொரியா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்துகின்றன. ஆசிய பிராந்தியத்தில் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் அதிக எண்ணிக்கையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

பேக்கிங் செய்தல், பொருட்களை எடுப்பது, சில்லரை விற்பனை கடைகளில் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆபத்தான தொழிற்சாலைக் கழிவுகளை அகற்றுவது, அணுக்கழிவை அகற்றுவது உள்ளிட்ட பணிகளில் பெரும்பாலான நாடுகளில் ரோபோக்கள் உபயோகப்படுகின்றன. ஆட்டோ மொபைல் துறையில் குறிப்பாக பெயின்ட் அடிப்பது, வெல்டிங் செய்வது உள்ளிட்ட பணிகளிலும் ரோபோக்களின் உபயோகம் அதிக அளவில் உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!