ஊதிய தளம் 40 முடிந்த பிறகு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே ஊதிய உயர்வு. 


புதிய ஊதியக்குழு அரசாணை எண் 303 நிதி (ஊகு) துறை நாள் : 11.10.2017 ( பண பலன் 1.10.2017 முதல்) ன்படி வெளியிட்ட தர ஊதியகட்டில் 40 தளங்கள் மட்டுமே இருந்தது. அதன் பிறகு அரசாணை எண் 90 நிதித் (ஊ. கு) துறை நாள் 26.2.2021 ன்படி கூடுதலாக 5 தளங்கள் நீட்டித்து ஆணையிடபட்டது. நீட்டிக்கப்பட்ட ஊதிய தளம் ஆண்டு ஊதிய உயர்வுக்கு உரியதல்ல. தேக்க ஊதியம் (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிட) வழங்குவதற்கு மட்டுமே. 40 தளம் முடிவடைந்த பின்னர் 41 வது தளம் இரண்டு ஆண்டுகள் முடியாமல் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கியதால் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரின் ஓய்வூதிய கருத்துரு மாநில கணக்காயர் அவர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!