ஆசிரியர் தகுதி தேர்வை (டெட்) ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான அறிவிப்பை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கடந்த மாதம் 14-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1, தாள்-2 என்ற அடிப்படையில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கான விரிவான பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது. தேர்வு எழுதக்கூடிய தேர்வர்கள் அந்த இணையதளத்தில் சென்று புதிய பாடத்திட்டத்தின் விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Search here!