பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு அஞ்சல் துறை அலுவலகத்தில் தபால் பிரிப்பாளராக வேலையைத் தொடங்கியவர் ரேணுகா. 


தற்போது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினராக தமிழக ஆளுநரால் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.‌ இந்த உயரம் எப்படி சாத்தியமாயிற்று என்பதை அவரிடமே கேட்டோம். ‘‘என்னுடைய பூர்வீகம் மதுரை. அப்பா திருப்பூர் சாயப்பட்டறையில் மாத சம்பளத்திற்கு வேலை செய்தார். அம்மா குடும்பத்தை நிர்வகித்தார். 


உங்களுடைய ஆசை என்ன? 

தமிழ் இலக்கணத்தை எல்லா மாணவர்களிடமும் மிக எளிமையாக கொண்டு சேர்க்க ஆர்வமாக இருக்கிறேன். இதன்மூலம் தமிழ் மொழியை இளைய தலைமுறையினரிடம் மிக ஆழமாக கொண்டு செல்ல முடியும். 

முன்னேற துடிக்கும் பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன? 

தடைகளை தாண்டி சாதிக்க தயாராக இருங்கள். அதற்கு ஆதரவு கரம் நீட்ட ஆண்களும் முன்வருவார்கள். என்னை போன்ற பெண்களும் உதவிகரம் நீட்டுவார்கள்.


வறுமையான சூழல்தான். அதனால் நானும் என் தங்கையும் பெரியப்பாவிடம் வளர்ந்தோம். பெரியப்பாவின் வழிகாட்டுதல்தான் எனக்கு பெரிய பலம். பத்தாம் வகுப்பு கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தேன். 12-ம் வகுப்பில் ஆயிரத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றேன்.‌ குடும்ப சூழ்நிலையை நினைத்து பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் ஏதாவது ஒரு அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.‌ ஆனால் நன்றாக படித்ததால் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று வீட்டில் வலியுறுத்தினார்கள்.‌ ஒருவழியாக சமாதானம் ஆகி ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து 2 ஆண்டு பட்டயப் படிப்பு முடித்தேன். 

அதற்கு மேலும் சமாதானம் ஆகாமல் அரசு வேலைக்கு செல்வது என்று தீவிரமாக முடிவெடுத்துவிட்டேன்’’ என்றவர், திறமைகளை வளர்த்து கொண்டு படிப்படியாக முன்னேறிய விதத்தை விளக்கினார். ‘‘ஒரு வருடம் சரியாகத் திட்டமிட்டு டைப்ரைட்டிங் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் கிரேடு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்தேன்.‌ அதற்குப் பிறகு தொடர்ந்து பல போட்டித் தேர்வுகளை எழுத ஆரம்பித்தேன். 


குரூப்-4 தேர்வு, அஞ்சல் துறை தேர்வுகள், ரெயில்வே தேர்வுகள் என்று எல்லா தேர்வுகளையும் எழுதினேன். பல முயற்சிகளுக்கு பிறகு அஞ்சல் துறை நடத்திய தேர்வில் மதுரை மாவட்டத்தில் முதல் ரேங்க் பெற்று வெற்றி பெற்றேன். சார்ட்டிங் அசிஸ்டென்ட் வேலையில் சேர்ந்தேன்’’ என்றவருக்கு, வேலையுடன் சேர்த்து, குடும்ப பொறுப்புகளும் கிடைத்தன. ஆம்..! ஆசிரியரை மணம் முடித்தார். ‘‘வாழ்க்கை பற்றிய உயர்ந்த லட்சியங்களோடும் கனவுகளோடும் வந்து சேர்ந்த என் கணவர் அதற்கு பிறகு என் வாழ்க்கை வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தார். 

அவரது உந்துதலால் பணியாற்றிக் கொண்டே, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். புலவர் பயிற்சியும் முடித்தேன். ஆசிரியராகப் பணியாற்றி வரும் என் கணவர் எழுத்தாளரும் கூட. அவர்தான் எனக்கு ஆசிரியர் பணி தேர்வுக்காக பயிற்சி கொடுத்தார். அந்த தேர்வில் வெற்றி பெற்று தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்" என்றவர், ஆசிரியர் பணி மூலம் மாணவர்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார். ‘‘நான் விரும்பியது ஆசிரியர் பணிதான். அதனால் மாணவர்களுடன் எனது வாழ்க்கை அழகாக மாறியது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் வறுமையை அறிந்தவள் நான். எனவே படிக்கும்போதே மாணவர்களுக்கு பகுதி நேரமாக கைத்தொழில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். 

எம்பிராய்டரி, மெஹந்தி டிசைனிங் போன்ற சிறுசிறு பயிற்சிகள் கொடுத்து அவர்கள் பகுதி நேரமாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறேன். இதற்கிடையில் எம்.ஏ., எம்.பில்., பட்டங்களையும் படித்து முடித்தேன். இரண்டு நூல்களை எழுதி இருக்கிறேன். முக்கியமாக ‘இனி ஒரு கல்வி செய்வோம்' என்ற நூல் தமிழகத்தில் பரவலான வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் கரிகாலன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் என் கணவருக்கு உதவியாக அந்த கதைக்கு வசனம் எழுதி வருகிறேன்’’ என்றவரை, கவுரவ பட்டம் தேடி வந்திருக்கிறது. அதுபற்றி விவரிக்கிறார். 

 ‘‘என்னுடைய இலக்கிய முயற்சிகளும் மாணவர்களுக்கான பணிகளும் ராஜ்பவன் வரை எட்டி இருக்கிறது. அதனால்தான் இப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிப் பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். இது மூன்று வருடங்களுக்கான கவுரவப் பணி. 

பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தை போதிக்க வேண்டும் என்பதற்காகவும், காலத்திற்கேற்ப வேலைவாய்ப்பு தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ‘அறம் சார்ந்த வேலைவாய்ப்பு மன்றம்' தொடங்க தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறேன். இன்னும் பல புதுமைகளை முன்னெடுக்க ஆவலாக இருக்கிறேன்’’ என்று விடைபெற்றார். ரேணுகா தற்போது திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!