10 ஆம் வகுப்பு - தமிழ் - பொதுத்தேர்வில் வெற்றி - விரிவானம் பத்தாம் வகுப்பு - தமிழ் பொதுத்தேர்வில் வெற்றி ! வினா எண் - 44 , விரிவானம் விரிவானம் வினா எண் : 44 

 1) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப் பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க முன்னுரை: கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பற்றிய கதை. அன்னமய்யா: 

 1. ஏழை விவசாயி. 

 2. பசித்தவருக்கு உணவு தருபவர்.

 3. முன் பின் தெரியாத இளைஞனுக்கு உணவு அளித்தவர். 

 4. கலயத்தில் இருந்த கஞ்சியை இளைஞனுக்குக் கொடுத்தார். பெயர்ப்பொருத்தம்: பசியாறிய இளைஞன்அவருடைய பெயரைச் சொல்லி மகிழ்ந்தான். முன்னுரை: தமிழகப் பண்பாடுகளுள் சிறந்தது விருந்தோம்பல். கிராமத்து மனிதர்கள் காட்டும் விருந்தோம்பல் பற்றிய கதையை கி.இராஜநாராயணன் நம்மிடையே பகிர்ந்துள்ள விதத்தைப் பார்ப்போம். 

 அன்னமய்யா: 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்பதற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் அன்னமய்யா. வயலில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அன்னமய்யா களைத்துப் போன ஒருவரைச் சாலையில் கண்டார். அவருக்கு உதவி தேவை என்பதை அறிந்து அழைத்து வந்தார். அன்னமய்யாவின் செயல்: சாலையில் களைத்து வந்த இளைஞன் அன்னமய்யாவிடம் கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா? எனக் கேட்டார். அன்னமய்யா 'இதோ நீச்சத் தண்ணீ எடுத்து வருகிறேன்.'எனக் கூறி தேங்காய் சிரட்டையில் ஊற்றித் தந்தார்.அத்துடன் தான் வைத்திருந்த துவையலையும் கொடுத்தார். 

 பெயர்ப் பொருத்தம்: கஞ்சியைக் குடித்த இளைஞன் அன்னமய்யாவின் பெயரைக் கேட்டான். அன்னமய்யா தன் பெயரைக்கூற வழிப்போக்கன் சிரித்தபடியே பெயருக்கேற்ற மனசு என்பதை தன் மனதிற்குள் சொல்லிக் கொண்டான். 

 முடிவுரை: 

 பெயருக்கு ஏற்ற பெருந்தகையாளர் அன்னமய்யா. தமிழர் பண்பாட்டை இன்றும் காத்து வருபவர்கள் கிராமத்து மக்களே! தர்மம் தலைகாக்கும்!

Post a Comment

Previous Post Next Post

Search here!