மேற்காணும் பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கடவுச் சீட்டு அளவிலான ஒளிப்படம், முகவரி, பிறந்த நாள், மதம், இனம், கல்வித் தகுதி, தொழிற்கல்வித் தகுதி, முன்னுரிமை கோருவதற்கான சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகிய விவரங்களுடன் தேவையான சான்றிதழ்களின் ஒளிப்படிகளை தற்சான்றொப்பத்துடன் இணைத்து 30.05.2022 ஆம் நாள் | பிற்பகல் 5.30. மணிக்குள் நேரிலோ, அஞ்சலிலோ கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணியிடங்களுக்கான நியமனம் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வயது வரம்புக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவத்தை www.sorkuvai.com எனும் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம், எண்.75, சாந்தோம் நெடுஞ்சாலை, செ.ம.தொ.இ/460/வரைகலை/2022 எம்.ஆர்.சி. நகர், சென்னை - 600 028. சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் இயக்குநர்

Post a Comment

Previous Post Next Post

Search here!