போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்றவர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் ஐகோர்ட்டு உத்தரவு சென்னை ஐகோர்ட்டில் போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், ‘7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கவேண்டிய நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவு பாரபட்சமானது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி பிற ஓய்வூதியதாரர்களுக்கும் ஒய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி சி.சரவணன் முன்பாக நடந்தது. அப்போது நீதிபதி, ‘7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்குவது என்பது பாரபட்சமானது. 


எனவே, கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வுபெற்றவர்களுக்கும் 7-வது ஊதிய ஒப்பந்தக்குழு பரிந்துரைப்படி ஓய்வூதியம், நிலுவைத்தொகை, அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகளை தமிழ்நாடு அரசு பாரபட்சமின்றி வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!