கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய ‘டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

பள்ளிகள் இன்று (நேற்று) திறக்கப்படுகின்றன. துள்ளிவரும் பிள்ளை செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். 


கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து படிக்கும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாக கல்வி கற்றீர்கள். ஆனாலும் பள்ளியில் அமர்ந்து கற்கும் அனுபவத்துக்கு இணையானது ஏதுமில்லை. பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாணவ-மாணவியர் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். அதேபோல் இருபால் ஆசிரிய பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகளை நோக்கி பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களை கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களை கற்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடைபட்ட கல்வியை தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்வி சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும். மாநிலம் பயன்பெறட்டும். இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!