தமிழக காவல் துறையில் 3,552 பணி இடங்கள் 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் இரண்டாம் நிலை காவலர் (மாவட்ட/மாநகர ஆயுதப்படை - ஆண்கள்: 1,526, பெண்கள்: 654), தமிழ்நாடு சிறப்பு காவல் படை - ஆண்கள்: 1091, இரண்டாம் நிலை சிறைக் காவலர் - ஆண்கள்:153, பெண்கள்: 8, தீயணைப்பாளர் - ஆண்கள்: 120 என மொத்தம் 3,552 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

 விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1-7-2022 அன்றைய தேதிப்படி 18 முதல் 26 வயதுக்குட்பட்டிருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் நடைமுறை 7-7-2022 அன்று தொடங்கும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 15-8-2022. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!