வேலைவாய்ப்பு செய்திகள் பட்டதாரிகளுக்கு வேலை 

ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் (எஸ்.எஸ்.சி) மூலம் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லி காவல் துறை (ஆண்-228), பெண் (112), பி.எஸ்.எப், சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப், ஐ.டி.பி.எப், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட மத்திய ஆயுத படைகளில் (3900) என மொத்தம் 4300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

30-8-2022 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் 1-1-2022 அன்றைய தேதிப்படி 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-1-1997-க்கு முன்போ, 1-1-2002-க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. உடல் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மருந்தாளுனர் பணி தமிழ்நாடு மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் 889 மருந்தாளுனர் (பார்மசிஸ்ட்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பார்மசி டிப்ளமோ படிப்பு அல்லது பார்மசியில் இளங்கலை படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 தமிழ் தகுதி தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-8-22. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட விரிவான விவரங்களை www.mrb.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

Previous Post Next Post

Search here!