பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 3 - தொகாநிலைத்தொடர்கள் & திருக்குறள் - வினாக்களும் விடைகளும் / 10TH TAMIL - EYAL 3 - ONLINE TEST - QUESTION & ANSWER.

வினாடி வினா & இயங்கலைத்தேர்வு

வினாக்களும் விடைகளும்

1) ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்துவது ----- தொடர் எனப்படும்.

அ) தொகைநிலைத் தொடர்

ஆ) தொகாநிலைத்தொடர்

இ) கலவை வாக்கியத்தொடர்

ஈ) தனிமொழித்தொடர்

விடை : ஆ ) தொகாநிலைத்தொடர்

2) தொகாநிலைத் தொடர்கள் ----- வகைப்படும்.

அ) மூன்று

ஆ) ஆறு

இ) ஒன்பது

ஈ) பத்து

விடை : இ ) ஒன்பது 

3) எழுவாயுடன் பெயர் , வினை , வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது ----- தொடர்.

அ) எழுவாய்த்தொடர்

ஆ) வேற்றுமைத்தொடர்

இ) வினைமுற்றுத்தொடர்

ஈ) அடுக்குத்தொடர்

விடை : ஈ ) விளித்தொடர்

4) நண்பா எழுது! - இது எவ்வகைத் தொடர்?

அ) எழுவாய்த்தொடர்

ஆ) இடைச்சொல்தொடர்

இ) உரிச்சொல் தொடர்

ஈ) விளித்தொடர்

விடை : ஈ ) விளித்தொடர்

5) வினைமுற்றுடன் ஒரு பெயர்
தொடர்வது ----- தொடர்.

அ) வினையெச்சத்தொடர்

ஆ) வினைமுற்றுத்தொடர்

இ) வேற்றுமைத்தொடர்

ஈ) எழுவாய்த்தொடர்

விடை : ஆ ) வினைமுற்றுத்.தொடர்

6) ' கேட்ட பாடல்' என்பது ------ 
தொடருக்குச் சான்றாகும்.

அ ) பெயரெச்சத் 

ஆ) வினையெச்சத் 

இ) முற்றெச்சத்

ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

விடை : அ ) பெயரெச்சத் 

7) முற்றுப்பெறாத வினை ,
வினைச்சொல்லைத் தொடர்வது ------
தொடர்.

அ) வினைமுற்றுத்தொடர்

ஆ) வினையெச்சத்தொடர்

இ) பெயரெச்சத்தொடர்

ஈ) இடைச்சொல் தொடர்

விடை : ஆ ) வினையெச்சத்தொடர்

8) அன்பால் கட்டினார் - இது ------- 
வேற்றுமைத் தொகாநிலைத்
தொடருக்குச் சான்றாகும்.

அ ) இரண்டாம்

ஆ) மூன்றாம்

இ) நான்காம்

ஈ) ஐந்தாம்

விடை : ஆ ) மூன்றாம்

9) அறிஞருக்கு நூல் , அறிஞரது
நூல் ஆகிய சொற்றொடர்களில்
பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது ------

அ) வேற்றுமை உருபு

ஆ) எழுவாய்

இ) உவம உருபு

ஈ) உரிச்சொல்

விடை : அ ) வேற்றுமை உருபு 

10 ) " பழகப் பழகப் பாலும் புளிக்கும் " - இப்பழமொழியில் உள்ள தொடர்வகை --

அ) பெயரெச்சத்தொடர்

ஆ) வினையெச்சத்தொடர்

இ) உரிச்சொல்தொடர்

ஈ) அடுக்குத்தொடர்

விடை : ஈ ) அடுக்குத்தொடர்

11) வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்களில் பொருந்தாதது எது ?

அ) வழியை நோக்கினான்

ஆ) விழியால் பேசினான்

இ) மொழிக்கு இசைந்தாள்

ஈ) பாடி மகிழ்ந்தாள்

விடை : ஈ ) பாடி மகிழ்ந்தாள்

12) மாநகர் ------ தொடர்.

அ ) இடைச்சொல் தொடர்

ஆ) வினைமுற்றுத்தொடர்

இ) உரிச்சொல்தொடர்

ஈ) அடுக்குத்தொடர்

விடை : இ ) உரிச்சொல் தொடர்

13) கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத தொடர் ------

அ) வருக வருக

ஆ) விம்மி விம்மி

இ) நன்று நன்று

ஈ) சலசல

விடை : ஈ ) சலசல

14) ஒழுக்கம் ------ தரும்

அ ) உயிர்

ஆ) விழுப்பம்

இ) இழுக்கம்

ஈ) பொருள்

விடை : ஆ ) விழுப்பம்

15 ) உலகத்தோடு ஒத்து வாழக்
கல்லாதவர் -----  என அழைக்கப்படுவார்.

அ) ஒழுக்கமில்லாதவர்

ஆ) உயர்வு இல்லாதவர்

இ) அறிவில்லாதவர்

ஈ) படிக்காதவர்

விடை : இ ) அறிவில்லாதவர்

16) காமம் ------ மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய் .

அ) வெகுளி

ஆ) கல்வி

இ) அச்சம்

ஈ) பகை

விடை : அ ) வெகுளி

17) வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு -

இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி

அ) உருவக அணி

ஆ) இல்பொருள் உவமையணி

இ) எடுத்துக்காட்டு உவமையணி

ஈ) உவமையணி

விடை : ஈ ) உவமை அணி 

18 ) தாளாண்மை என்னும்   தகைமைக்கண் தங்கிற்றே ------
என்னும் செருக்கு.

அ ) வேளாண்மை

ஆ) முயலாமை

இ) இயலாமை

ஈ) பேசாமை

விடை : அ ) வேளாண்மை 

19) முயற்சி திருவினை ஆக்கும் -
இத்தொடரில் 'திரு' என்பதன்
பொருள் -----

அ) கல்வி

ஆ) வீரம்

இ ) செல்வம்

ஈ) மக்கள்

20) எய்துவர் எய்தாப் பழி -

இக்குறளடிக்குப் பொருந்தும்
வாய்பாடு ------

அ) கூவிளம் தேமா மலர்

ஆ) கூவிளம் புளிமா நாள்

இ) தேமா புளிமா காசு

ஈ) புளிமா தேமா பிறப்பு

விடை : அ ) கூவிளம் தேமா மலர்

Post a Comment

Previous Post Next Post

Search here!