பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 , நீதிவெண்பா , வினாவிடை .பொருள்கோள் - இயங்கலைத்தேர்வு / 10TH TAMIL - EYAL 5 - NEETHI VENBA - ONLINE TEST

இயல் - 5 , கவிதைப்பேழை - நீதி வெண்பா

கற்கண்டு - வினா விடை வகைகள் , பொருள்கோள்

வினாக்களும் விடைகளும்

1) கற்றவர் வழி அரசு செல்லும் என்கிறது ----- இலக்கியம்

அ ) சங்க இலக்கியம்

ஆ) பிற்கால இலக்கியம்

இ) பக்தி இலக்கியம்

ஈ) நவீன இலக்கியம்

விடை : அ ) சங்க இலக்கியம்

2) தோண்டும் அளவு சுரக்கும் நீர் போலக் கற்கும் அளவு அறிவு சுரக்கும் என்று கூறிய நூல்

அ) நாலடியார்

ஆ) திருவாசகம்

இ) திருக்குறள்

ஈ) நான்மணிக்கடிகை

விடை : இ ) திருக்குறள்

3) " அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை " -என்று இவ்வடிகளில்
குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்

ஆ) அறிவியல்

இ) கல்வி

ஈ) இலக்கியம்

விடை : இ ) கல்வி 

4) அருந்துணை என்பதைப்
பிரித்தால் -----

அ ) அருமை + துணை

ஆ) அரு + துணை

இ ) அருமை + இணை

ஈ) அரு + இணை

விடை : அ ) அருமை + துணை 

5) சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர்

அ) ஆறுமுக நாவலர்

ஆ) சோமசுந்தர பாரதியார்

இ ) உமறுப்புலவர்

ஈ) செய்குதம்பிப்பாவலர்

விடை : ஈ ) செய்குதம்பிப் பாவலர்

6)சதம் என்றால்  ------ என்று  பொருள்

அ) பத்து

ஆ) நூறு

இ) இருநூறு

ஈ) நானூறு

விடை : ஆ ) நூறு

7) செய்குதம்பிப் பாவலர் ------மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

அ) மதுரை

ஆ) திருநெல்வேலி

இ கன்னியாகுமரி

ஈ) தூத்துக்குடி

விடை : இ ) கன்னியாகுமரி 

8) செய்குதம்பிப் பாவலர் உரை எழுதிய நூல்

அ) கந்த புராணம்

ஆ) சீறாப்புராணம்

இ) பெரிய புராணம்

ஈ) கருடபுராணம்

விடை : ஆ ) சீறாப்புராணம்

9) செய்குதம்பிப் பாவலர் ------- ஆம் ஆண்டில் சதாவதானி என்ற
பாராட்டைப் பெற்றார்.

அ) 1907

ஆ) 1917

இ) 1927

ஈ) 1947

விடை : அ ) 1907

10) வினா ------  வகைப்படும்

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) எட்டு

விடை : இ ) ஆறு 

11) தான் விடை அறிந்திருந்தும் ,
அவ்விடை பிறருக்குத் தெரியுமா
என்பதை அறியும் பொருட்டு வினவுவது ----- வினா

அ) அறிவினா

ஆ) அறியா வினா

இ) ஐயவினா

ஈ) ஏவல் வினா

விடை : அ ) அறிவினா 

12) இச்செயலைச் செய்தது மங்கையா? மணிமேகலையா? என வினவும் வினா

அ ) அறியா வினா

ஆ) ஐயவினா

இ) கொடை வினா

ஈ ) கொளல்வினா

விடை : ஆ ) ஐயவினா 

13) விடையின் வகைகள் மொத்தம் -----

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஏழு

ஈ) எட்டு

விடை : ஈ ) எட்டு

14) சுட்டுவிடை , மறை விடை , நேர்விடை இவை மூன்றும் ----- விடைகள் ஆகும்.

அ) வெளிப்படை

ஆ) குறிப்பு

இ) தூண்டல்

ஈ) பொது

விடை : அ ) வெளிப்படை


15 ) ' கடைக்குப் போவாயா?' என்ற கேள்விக்குப்  ' போவேன் ' என்று உடன்பட்டுக் கூறும் விடை

அ) சுட்டுவிடை

ஆ) மறைவிடை

இ) நேர் விடை

ஈ) ஏவல் விடை

விடை : இ ) நேர்விடை

16) " உனக்குக் கதை எழுதத்
தெரியுமா? " என்ற வினாவிற்குக் கட்டுரை எழுதத் தெரியும் என்று கூறுவது
--------  விடை

அ) நேர் விடை

ஆ) வின எதிர் வினாதல் விடை

இ) இனமொழி விடை

ஈ) உறுவது கூறல் விடை

விடை : இ ) இனமொழி விடை


17) செய்யுளில் சொற்களைப்   பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை
------- ஆகும்.

அ) வியங்கோள்

ஆ) பொருள்கோள்

இ) தொடர் அமைப்பு

ஈ) வரிசை அமைத்தல்

விடை : ஆ) பொருள்கோள்

18) ஒரு செய்யுளில் சொற்கள் முறை பிறழாமல் வரிசையாக அமைந்து வருவது  -------   பொருள்கோள்.

அ) ஆற்றுநீர்ப் பொருள்கோள்

ஆ) மொழிமாற்றுப் பொருள்கோள்

இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

ஈ) நிரல்நிறைப் பொருள்கோள்

விடை : ஈ ) நிரல்நிறைப்பொருள்கோள்

19 ) ஆலத்து மேல குவளை குளத்துள வாலின் நெடிய குரங்கு - இப்பாடல் ------ 
பொருள்கோளுக்குச் சான்றாகும்.

அ) நிரல் நிரைப் பொருள்கோள்

ஆ) தாப்பிசைப்பொருள்கோள்

இ) அளைமறிபாப்புப் பொருள்கோள்

ஈ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

விடை : ஈ ) கொண்டு கூட்டுப் பொருள்கோள்

20) இங்கு நகரப் பேருந்துகள்நிற்குமா? என்று வழிப்போக்கர்கேட்டது -------  வினா." அதோ அங்கே நிற்கும் " என்று மற்றொருவர் கூறியது ------ விடை

அ) ஐயவினா , வினா எதிர் வினாதல்

ஆ) அறிவினா , மறைவிடை

இ) அறியா வினா , சுட்டுவிடை

ஈ) கொளல்வினா , இனமொழி விடை

விடை : அறியா வினா , சுட்டுவிடை

Post a Comment

Previous Post Next Post

Search here!