பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 6 - கம்பராமாயணம் , அகப்பொருள் இலக்கணம் / 10TH TAMIL - KAMPARAMAYANAM - ONLINE TEST

இயல் - 6 

கம்பராமாயணம் / அகப்பொருள் இலக்கணம்

வினாக்களும் விடைகளும்

1) உள்ளதை உணர்ந்தபடி கூறுவது ------

அ) கதை

ஆ) கவிதை

இ) கட்டுரை

ஈ) நாடகம்

விடை : ஆ ) கவிதை 

2)' கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்' என்று பெருமைப்பட்ட கவிஞர் -----

அ ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) சுரதா

 ஈ) கண்ணதாசன்

விடை : அ ) பாரதியார்

3) கம்பர் இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி ----- எனப்பெயரிட்டார்.

அ) கம்பராமாயணம்

ஆ) ராமாயணம்

இ) இராமாவதாரம்

ஈ) இராமன்கதை

விடை : இ ) இராமாவதாரம்

4 ) கம்பர் ------நாட்டின் திருவழுந்தூரைச் சேர்ந்தவர்

அ) சேர

ஆ) சோழ

இ) பாண்டிய

ஈ) பல்லவ

விடை : ஆ ) சோழ 

5) கம்பரை ஆதரித்த வள்ளல் ------

அ) சடையப்ப

ஆ) எட்டப்ப

இ) பாண்டித்துரை

ஈ) சேதுபதி

விடை : அ ) சடையப்ப 

6) கம்பன் வீட்டுக்கட்டுத் தறியும் ------ பாடும்

அ ) புவி

ஆ) புகழ்

இ) பெருமை

ஈ) கவி

விடை : ஈ ) கவி

7)" ------ என்னும் ஒண்பாவிற்கு
உயர் கம்பன் " என்று புகழப்பட்டவர்

அ ) சிந்து

ஆ) விருத்தம்

இ )  கட்டளை

 ஈ ) கண்ணி

விடை : ஆ) விருத்தம்

8) கம்பராமாயணத்தில் உள்ள
காண்டங்களின் எண்ணிக்கை ----- 

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) எட்டு

விடை : இ ) ஆறு

9 ) ஓர் உயிர் பல உடம்புகளில் ஊடுருவி உலாவுது போல் பல படங்களில் பாய்ந்த நதி -----

 அ) கங்கை

ஆ) வைகை

இ) பொருநை

ஈ) சரயு

விடை : ஈ ) சரயு

10) கோசலை நாட்டில் கொடை
இல்லாத காரணம்

அ ) நல்ல உள்ளம் உடையவர்கள்
இல்லாததால்

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ ) அரசன் கொடுங்கோல் ஆட்சி
புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

விடை : ஈ )அங்கு வறுமை இல்லாதால்

11) கம்பராமாயணத்தில் உறங்குகின்ற பாத்திரப் படைப்பின் பெயர் -----

அ) கர்ணன்

ஆ) கும்பகருணன்

இ ) அனுமான்

ஈ) இராவணன்

விடை : ஆ) கும்பகருணன்

12) கம்பர் எழுதாத நூல் -----

அ) சரசுவதி அந்தாதி

ஆ) சடகோபர் அந்தாதி

இ) ஏரெழுபது

ஈ) காரெழுபது

விடை : ஈ ) காரெழுபது

13) மலையும் மலைசார்ந்த இடமும் ----

அ) குறிஞ்சி

ஆ) நெருஞ்சி

இ ) பாலை

ஈ) முல்லை

விடை : அ ) குறிஞ்சி

14 ) நிலமும் பொழுதும் -----எனப்படும்.

அ) கருப்பொருள்

ஆ) முதற்பொருள்

இ) உரிப்பொருள்

ஈ) உயிர்ப்பொருள்

விடை : ஆ ) முதற்பொருள்

15 ) பொழுது - --- வகைப்படும்

அ) இரண்டு

ஆ) நான்கு

இ) ஆறு

ஈ) பத்து

அ ) இரண்டு 

16) ஆவணி, புரட்டாசி -----காலம் ஆகும்

அ) முன்பனி

ஆ) பின்பனி

இ) கார்காலம்

ஈ) குளிர்காலம்

விடை : இ ) கார்காலம்

17) மாலை 6 மணி முதல் இரவு பத்து மணிவரை உள்ள சிறுபொழுது -----

அ) எற்பாடு

ஆ) மாலை

இ) யாமம்

ஈ) வைகறை

விடை : ஆ ) மாலை

18) எற்பாடு - இதில் ' எல் ' என்றால் -----

அ ) ஞாயிறு

ஆ) திங்கள்

இ) வானம்

ஈ) நட்சத்திரம்

விடை : அ ) ஞாயிறு

19) குறிஞ்சி நிலத்தின் தெய்வம்

அ) திருமால்

ஆ) இந்திரன்

இ) வருணன்

 ஈ) முருகன்

விடை : ஈ ) முருகன்

20) நெய்தல் நிலத்தின் தெய்வம்

அ ) முருகன்

ஆ) கொற்றவை

இ) வருணன்

ஈ) திருமால்

விடை : இ) வருணன்

Post a Comment

Previous Post Next Post

Search here!