12.11.2022 அன்று நடைபெற இருந்த கலந்தாலோசனைக் கூட்டம் (CRC) நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - EDUNTZ

Latest

Search here!

Wednesday 9 November 2022

12.11.2022 அன்று நடைபெற இருந்த கலந்தாலோசனைக் கூட்டம் (CRC) நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் சென்னை-06 ந.க.எண். 01625/ஊ1/2022, நாள்.09.11.2022 குறுவளமைய 

பொருள்: சென்னை -06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12.11.2022 அன்று நடைபெற இருந்த கலந்தாலோசனைக் கூட்டம் (CRC) நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது - (1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) - சுற்றறிக்கை அனுப்புதல்-தொடர்பாக. 


பார்வை : 

1. 2022-2023 ஆம் ஆண்டிற்கான பயிற்சி அட்டவணை. 

2. மாவட்டத் திட்ட இயக்குநர் தலைமையில் நடைபெற்ற மீளாய்வு கூட்டம் நாள். 19.07.2022. 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து பல்வேறு தொடர் ஆசிரியர் பயிற்சிகள் (Teacher Professional Development) 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடத்த திட்டமிடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 12.11.2022 அன்று கால அட்டவணைப்படி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடைபெற இருந்த குறுவளமைய கலந்தாலோசனைக் (CRC) கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது. 

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நகல் ரி. ஆணையர், பள்ளிக்கல்வி ஆணையரகம், தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 

2. மாநிலத்திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது. 

3. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது. இயக்குநர்

No comments:

Post a Comment