திருச்சி அண்ணா அறிவியல் மையம்- கோளரங்கமானது மாணவ சமுதாயம் பயன்பெற வேண்டி தொடர்ந்து அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 
அதில் ஒன்றாக கணித திறனறி தேர்வை பள்ளி மாணவர்களுக்கு நடத்த உள்ளது. அதன்படி, வருகிற 3-ந்தேதி காலை 11 மணிக்கு அண்ணா அறிவியல் மையம்- கோளரங்க வளாகத்தில் நடைபெறும் இந்த தேர்வில் கலந்து கொள்ள நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்ய 1-ந்தேதி கடைசி நாள் ஆகும். 5, 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். முதல் பரிசாக ரூ.2 ஆயிரம், 2-வது பரிசு 2 பேருக்கு ரூ.1000, 3-வது பரிசாக 3 பேருக்கு ரூ.500 மற்றும் ஆறுதல் பரிசாக 20 பேருக்கு ரூ.250 வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை திருச்சி அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Search here!