2024 ஜனவரி மாதம் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்துதல் - SPD செயல்முறைகள்!
பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளின்படி 2024-ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் வருகிற 05.01.2024, வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை நடத்திட அறிவுறுத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் பின்வரும் பொருள்கள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் இயற்றிடக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டப் 

அ) கூட்டப்பொருள் நிரல்கள் 

1) பள்ளிகளைத் தூய்மைப்படுத்துதல்: 2024, ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது பள்ளிகளில் நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பெரும் நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுவினர் பங்கேற்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். இதுகுறித்துப் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் முடிவுசெய்யவும். பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்கவும் தலைமையாசிரியர்கள் வழியாகக் கேட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. (இதுகுறித்தான வழிகாட்டுதல்கள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரால் வழங்கப்படும்.)

Post a Comment

Previous Post Next Post

Search here!