ஆணை
☘️பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், க ஆய்வில் முதலமைச்சர்" என்ற
முன்னெடுப்பின் கீழ் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி "அரசின் சேவைகள்
குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது
ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும்* என கோரிக்கைகளை உடனுக்குடன்
தீர்வுகாண வலியுறுத்தி வருகிறார்கள்.
☘️மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின்
நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு
அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள்
விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வண்ணம் நிர்வாகத்தில் மற்றுமொரு
மைல் கல்லாக "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டம் முதல்வரின்
முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
☘️மக்களுடன் முதல்வர்" என்ற இந்த திட்டம் அன்றாடம் பொதுமக்கள்
அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம்
காணப்பட்டு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்
அடிப்படையில் அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில்
வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும்
ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற அனைத்து
மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق