எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - EDUNTZ

Latest

Search here!

Friday 15 December 2023

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

காய்கறி தோட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆரோக்கியமான பள்ளி வளாகத்தை உறுதி செய்யவும், சுகாதாரம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலின் மதிப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளவும், ‘எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' என்ற தூய்மை திட்டத்தின் கீழ், அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், `பள்ளி காய்கறி தோட்டம்' அமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் நேரடி சூரிய ஒளி பெறும் இடத்தை பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வு செய்யவேண்டும். நிலம் இல்லாத பட்சத்தில், தொட்டிகள் மற்றும் உபயோகித்த பிளாஸ்டிக் பொருட்கள், அரிசி பைகள் கொண்டு பள்ளி காய்கறி தோட்டங்களை அமைக்கலாம். 

தண்ணீர் வசதி காய்கறி தோட்டம் அமைக்கப்பட உள்ள பகுதிக்கு அருகில், தண்ணீர் வசதி இருப்பதை உறுதி செய்யவேண்டும். மாணவர்கள் கை கழுவும் நீரை பயன்படுத்தும் வகையில் அந்த பகுதிகளுக்கு அருகில் தோட்டத்தை அமைக்கலாம். பள்ளிகள் தங்கள் உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்பின் அடிப்படையில் கத்தரி, தக்காளி, கீரைகள், கொத்தமல்லி, அவரைக்காய், மிளகாய், வெண்டைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பீன்ஸ், முள்ளங்கி, பப்பாளி ஆகிய நன்றாக வளரும் காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு காய்கறி தோட்டம் அமைக்கலாம். 

ரூ.6½ கோடி நிதி பள்ளிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, மாணவர்கள் கவனமாக அறுவடை செய்யவேண்டும். அந்த காய்கறிகளை பள்ளிகளில் மதிய உணவு தயாரிப்புக்கு வழங்கலாம். பள்ளிகளில் காய்கறி தோட்டம் அமைக்கவும், சுற்றுச்சூழல் மன்றம் சார்ந்த நிகழ்வுகளுக்காகவும், பள்ளி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வீதம், 13 ஆயிரத்து 208 அரசு பள்ளிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கு ரூ.6½ கோடியே 60 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோர் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment