நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பள்ளி அளவிலான உயர்கல்வி வழிகாட்டல் / ஆலோசனை குழுவானது (Career Guidance Cell ) கடந்தாண்டு மே மாதம் 06.05.2023 அன்று முதல் செயல்பட்டு வருகின்றது. 

அதனைத் தொடர்ந்து. இக்கல்வியாண்டில் பயிலக்கூடிய மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடச்சியாக, உயர்கல்வி வழிகாட்டி குழுவில் ஒரு உறுப்பினராக செயல்பட இருக்கின்ற நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் அனைவரும் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் வருகின்ற ஜனவரி மாதம் முதல் பள்ளிகளுக்கு வந்து தன்னார்வப் பணி செய்யவிருகின்றார்கள். 

அதில் முதற்கட்டமாக, வருகின்ற ஜனவரி மாதம் 05.01.2024 வெள்ளிக்கிழமையன்று அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் நடைபெறவிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொள்வார்கள். அவர்களின் பங்களிப்பானது மிகவும் இன்றியமையாதது. ஆகவே, கீழ்காணும் நெறிமுறைகளை பின்பற்றுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

Previous Post Next Post

Search here!