உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட காணொளிகளை உயர் தொழில்நுட்ப ஆய்வக சர்வரில் வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு கல்வியாண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பள்ளி அளவில் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரந்தோறும் புதன் கிழமை 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (1.20 PM to 2.00 PM & 2.00 PM 2.40 PM) மற்றும் வெள்ளிக்கிழமை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு (2.50 PM to 3.30 PM & 3.00 PM 410 PM) இந்த நேரங்களில் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் மேற்படி வகுப்புகள் தொடர்பான பதிவு செய்யப்பட்ட பல்வேறு காணொளிகள் உயர்தொழில் நுட்ப ஆய்வக கணினியின் மூலமாக பள்ளிகளுக்கும் ஏற்கனவே அனைத்து அரசு உயர்நிலை/மேல்நிலைப் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் பார்வை 4ல் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, உயர் கல்வி வழிகாட்டி வகுப்புகள் தொடர்பான காணொளிகளை அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உயர்தொழில் நுட்ப ஆய்வக கணினியில் (Hi-Tech Lab Server) ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலே வைத்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

Post a Comment

Previous Post Next Post

Search here!