தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு: அரசாணை!

தமிழ் வளர்ச்சித் துறையின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் பள்ளிகளில், பயிலும் மாணவர்களில் தமிழ் மொழியை அழகாக எழுதி வருபவர்களை ஊக்குவிக்கவும், 

இதனடிப்படையில் பிற மாணவர்களக்கு தமிழில் அழகாக எழுதும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலும் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் மாவட்ட அளவில் பள்ளி, 

மாணவர்களுக்கு தமிழ் கையெழுத்துப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பார்வை 2-ல் காணும் அரசாணையில் இதன் தொடர் செலவினமாக ரூ.8,36,000/-(ரூபாய் எட்டு இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் மட்டும்) நிதி ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post

Search here!