10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - EDUNTZ

Latest

Search here!

Tuesday 15 October 2024

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு



பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2024-2025-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு. அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 24.09.2024 முதல் 15:10.2024 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யுமாறுஅறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் I விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம்வகுப்பு/ மேல்நிலை முதலாமாண்டு விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு மாணாக்கரின் 25.10.2024 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் வாய்ப்பாகும். 

No comments:

Post a Comment