மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கடைசி தேதி 14/02/2025 - EDUNTZ

Latest

Search Here!

Wednesday, 5 February 2025

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு கடைசி தேதி 14/02/2025

தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மிசன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் 1 பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Protection Officer Non Institutional Care) தற்காலிக பணியிடத்திற்கு, கல்வி தகுதி முதுகலையில் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology)/ மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) / பொது சுகாதாரம் (Public Health) / மேலாண்மை (Community Resource Management) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை சமூக வள் படித்திருக்க வேண்டும். (அல்லது) இளங்கலையில் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் (Recognized University) சமூகப்பணி (Social Wark) / 0மூகவியல் (Sociology]/ குழந்தைகள் வளர்ச்சி (Child Development) / மனித உரிமை பொது நிர்வாகம் (Human Rights Public Administration) / உளவியல் (Psychology) / மனநலம் (Psychiatry) / சட்டம் (Law) /பொது சுகாதாரம் (Public Health) / சமூக வள மேலாண்மை (Community Resource Management) / பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி களப்பணியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை (Implementation, monitoring and supervising in the preferably in the field of Women & Child Development) / சமூகநலம் (Social Welfare] ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மற்றும் திட்டங்கள் உருவாக்குவதில் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராகவும் மேலும் கணினி இயக்குவதில் திறமை வாய்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது வரம்பு 42 க்கு இருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு - ரூ.27,804/-, மேலும் சிறப்பு சிறார் காவல் அலகில் 2 சமூகப்பணியாளர் (Social Worker) தற்காலிக பணியிடத்திற்கு, கல்வி தகுதி: இளங்கலையில் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் (Recognized University) சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Socialogy) / சமூக அறிவியல் (Social Sciences) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை படித்திருக்க வேண்டும் மேலும்: Weightage for work experience candidate, Proficiency in Computers. வயது வரம்பு : 42 க்குள் இருத்தல் வேண்டும். இப்பணியிடத்திற்கு தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு - ரூ.18,536/-. மேற்கண்ட தகுதிகள் பெற்றிருக்க கூடிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கொள்ளலாம். செய்த விண்ணப்பத்தினை https://ariyalur.nic.in என்ற மாவட்ட இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை மேற்படி கல்வி சான்றிதழ்களின் நகலுடன் 14.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்-621704. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் பதவி குறித்த தகவல்களுக்கு மிசன் வாட்சாலயா (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமெனவும், மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், காலதாமதமாக வரப்பெறும் விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பொ.இரத்தினசாமி, இ.ஆ.ப., அவர்களால் தெரிவிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment