பொதுத் தேர்வுகள் பள்ளிக்கல்வித்துறை இயக்ககங்களைச் சார்ந்த உயர்
அதிகாரிகள் / இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை தேர்வுப்
பணிகளை கண்காணிக்கும் அதிகாரிகளாக நியமனம் செய்து, மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தல் -
ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வி அரசுத் தேர்வுகள் இயக்ககம் பள்ளிக்கல்வித்
(அ.தே) துறை அரசாணை(வாலாயம்) எண். 17 நாள்: 31.01.2025 திருவள்ளுவர் ஆண்டு 28050
குரோதி வருடம், தை-18 படிக்கப்பட்டவை:-
1. அரசாணை (நிலை) எண்.28, பள்ளிக் கல்வி
(வி1) துறை, நாள் 18.02.1999 2. அரசாணை (வாலாயம்) எண்.77, பள்ளிக் கல்வி (ஆதே)
துறை, நாள் 31.01.2024. 3. அரசுத்தேர்வுகள் இயக்குநரின் கடித ந.க.எண்.000043/எச்
1/2025, நாள் 09.01.2025
ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில்,
தேர்வுமுறை சீர்த்திருத்த வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசுத்
தேர்வுகள் இயக்குநரால் நடத்தப்படும் மேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / ஆங்கிலோ
இந்தியன் மற்றும் ஆசிரியர் பட்டயக்கல்வி ஆகிய தேர்வுகளுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம்
/ தொடக்கக் கல்வி இயக்ககம் / பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித்துறை,
ஆசிரியர் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஆகிய துறைகளைச் சார்ந்த இணை
இயக்குநர்களை தேர்வு பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு
அனுமதியும், அவ்வாறு தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படும் இணை இயக்குநர்கள் தாங்கள்
மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு
தெரியப்படுத்த வேண்டுமென அறிவுறுத்தியும் ஆணை வெளியிடப்பட்டது.
மேலே இரண்டாவதாகப்
படிக்கப்பட்ட அரசாணையில், 2024ஆம் கல்வியாண்டுமார்ச் / ஏப்ரலில் நடைபெற்ற பத்தாம்
வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுப் பணிகளில்,
பள்ளிக் கல்வித் உயர் அதிகாரிகள், இயக்குநர்கள், இணை துறை இயக்ககங்களைச் சார்ந்த
இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்களை, தேர்வுப் பணிகளை மேற்பார்வையிடும்
கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்தும், மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தும் ஆணை
வெளியிடப்பட்டது. இணைப்பில்
3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், அரசுத்
தேர்வுகள் இயக்குநர் தற்போது மார்ச் / ஏப்ரல் 2025ல் நடைபெறவுள்ள மேல்நிலை மற்றும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்பட்டு
வரும் பிற இயக்ககங்களைச் சார்ந்த இயக்குநர் / இணை இயக்குநர் ! துணை இயக்குநர்
ஆகியோர் தேர்வு பணிகளை மேற்பார்வையிடச் செல்ல வேண்டிய மாவட்டங்களின் உள்ள
அட்டவணையில் விவரங்களை இவ்வரசாணையின் உள்ளவாறு நியமனம் செய்து அரசாணை வழங்குமாறும்,
தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் இயக்குநர் இணை இயக்குநர் / துணை
இயக்குநர்களுக்கான பயணப்படி (TA) மற்றும் தினப்படி (DA) பட்டியல்களை அவரவர்கள்
பணிபுரியும் இயக்ககம் ! அலுவலகத்திலேயே உரிய கணக்குத் தலைப்பில் சமர்ப்பித்து
அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பெறுவதற்கு அனுமதி வழங்கிடுமாறும், அதிகாரிகள்
எதிர்பாராத சூழ்நிலையில் தேர்வுப்பணி மேற்பார்வையிட செல்ல இயலாத சூழ்நிலை ஏற்படின்,
அவ்வமையம் அவ்வலுவலருக்கு பதிலாக வேறு அலுவலரை நியமனம் செய்யும் அதிகாரத்தினை
அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
4.
மேற்காண் சூழ்நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்குநரின் கருத்துருவினை ஆய்வு செய்த
அரசு அதனை ஏற்று, நடைபெறவுள்ள மார்ச் ஏப்ரல் 2025ல் மேல்நிலை முதலாமாண்டு
இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட பள்ளிக்
கல்வித் துறை இயக்கங்களைச் சார்ந்த இவ்வரசாணையின் பிற்சேர்க்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள்
ஆகியோரை அவர்களுக்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் தேர்வுப் பணிகளை
மேற்பார்வையிட நியமனம் செய்தும், தேர்வு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் இயக்குநர்,
இணை இயக்குநர்/துணை இயக்குநர்களுக்கான பயணப்படி (TA) மற்றும் தினப்படி (DA)
பட்டியல்களை அவரவர்கள் பணிபுரியும் இயக்ககம் / அலுவலகத்திலேயே உரிய கணக்குத்
தலைப்பில்சமர்ப்பித்து செலவினங்களை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியும் அரசு
ஆணையிடுகிறது.
மேலும், மேற்காணுமாறு நியமனம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட
அதிகாரிகள் எதிர்பாராத சூழ்நிலையில் தேர்வுப்பணிகளை மேற்பார்வையிட செல்ல இயலாத
சூழ்நிலை ஏற்படின், அவ்வமையம் அவ்வலுவலருக்கு பதிலாக வேறு அலுவலரை நியமனம் செய்யும்
அதிகாரமும் அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment