ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 February 2025

ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு சார்ந்த தணிக்கைத் தடையை நிவர்த்தி செய்வதற்கான கூட்டம் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

பள்ளிக் கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலரின் செயல்முறைகள் 



பள்ளிக்கல்வி - அகத்தணிக்கை பிப்ரவரி 2025 மற்றும் மார்ச் 2025-ல் மாவட்டம் வரியாக தணிக்கை தடை நீக்கம் செய்தல் - அலுவலகம் /பள்ளிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடைகள் நீக்கம் செய்து ஆணை வழங்குதல்- அரசுக்கு செலுத்தவேண்டிய வட்டித் தொகை/ஆங்கில வழி கட்டணம்/ கணினி கட்டணத் தொகைகள் சலான் மூலம் செலுத்தியுள்ள விவரங்களை மட்டும் பெற்று பள்ளிவாரியாக தொகுத்து தயார் நிலையில் வைத்திருக்க தெரிவித்தல் சார்பு 

பிப்ரவரி 2025 மற்றும் மார்ச் 2025-ல் மாவட்டம் வரியாக தணிக்கை பிரிவு கண்காணிப்பாளர்கள் அலுவலகம்/பள்ளிகளில் நிலுவையில் உள்ள தணிக்கை தடை சார்பான விவரங்களில் அரசுக்கு செலுத்தவேண்டிய தொகை சார்பான தடைகளை மட்டும் நீக்கம் செய்து ஆணை வழங்க உரிய விவரங்களை சரிபார்த்து தொகுத்து நிதி ஆலோசகரிடன் ஒப்படைக்க உத்தேச பயண திட்டம் தயார் செய்யப்பட உள்ளது. எனவே தங்கள் மாவட்டத்தில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் நிலுவையில் உள்ள அகத்தணிக்கை தடைகளில் அரசுக்கு செலுத்தவேண்டிய வட்டித் தொகை/ஆங்கில வழி கட்டணம்/ கணினி கட்டணத் தொகைகள் சலான் மூலம் செலுத்தியுள்ள விவரங்கள் மற்றும் பணப்பலன் சாராத தணிக்கை தடை விவரங்களை மட்டும் இணப்பப்பட்டுள்ள படிவத்தில் அலுவலகம்/ பள்ளிவாரியாக பெற்று தொகுத்து தயார் நிலையில் 07.02.2025-க்குள் வைத்திருக்குமாறு தங்கள் மாவட்டத்தில் 14, 21, 28 ஆகிய தேதிகளில் முதன்மைக் கல்வி அலுவலக தலைமையிடத்தில் தணிக்கை தடை நீக்கம் செய்வதற்கான பள்ளிகள் பிரிக்கப்பட்டு தகுந்த ஏற்பாடுகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். "சலான் தொகை செலுத்தியது சார்பாக பணம் செலுத்தியுள்ள பள்ளியின் பெயர் முழுமையாக சலானில் இடம் பெற்றுள்ள விவரம், "பேமெண்ட் சக்சஸ்” (Payment Success) ஆக செலுத்தப்பட்டுள்ளது என்ற விவரம், எந்த காரணத்திற்காக எந்த காலத்திற்கான தொகை சலான் மூலம் செலுத்தப்பட்டள்ளது என்ற விவரங்கள் முழுமையாக சலானில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்து" அதன் பிறகு தொகுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதம் பெற்றுக் கொண்டமைக்கு உடன் ஒப்புதல் அளிக்க தெரிவிக்கலாகிறது. மேலும் நிவர்த்தி செய்ய கோரும் தணிக்கை தடை சார்பாக தணிக்கை தடை எழுப்பப்பட்ட தணிக்கை அறிக்கையின் நகல் கட்டாயம் படிவத்துடன் இணைக்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், ஊதிய நிர்ணயம் / ஊக்க ஊதிய உயர்வு மற்றும் இதர பணப்பலன் சார்ந்த தணிக்கை தடை சார்பான கூட்டம் ஏப்ரல்-2025, மே -2025, ஜூன் 2025 மற்றும் ஜூலை 2025 ஆகிய மாதங்களில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக தனி தனியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இணப்பு- படிவங்கள்


No comments:

Post a Comment