தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்ரவரி 15 வரை
நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திரா காந்தி தேசிய
திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர்
கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய
அரசு பல்கலைக்கழகமான இக்னோ, தொலைதூரக்கல்வி திட்டத்தின் வாயிலாக பல்வேறு பாடங்களில்
சான்றிதழ், டிப்ளமா, இளங்கலை, முதுகலை படிப்புகளை வழங்கி வருகிறது. 2025-ம் ஆண்டு
ஜனவரி பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிப்ரவரி
15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்பும்
மாணவர்கள் பிப்ரவரி 15 வரை ஆன்லைனில் (https://ignouadmission.samarth.edu.in)
விண்ணப்பிக்கலாம்.சேர்க்கை உறுதி செய்யப்பட்ட பிறகு தகுதியான மாணவர்கள் மத்திய
அரசின் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைனில் (www.scholarships.gov.in/)
விண்ணப்பித்துக்கொள்ளலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு
பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை (www.ignou.ac.in) பார்க்கலாம். மேலும், சென்னை
வேப்பேரி பெரியார் திடலில் உள்ள இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி
எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment