ஜெர்மனி நாட்டில் செவிலியர் (ஆண் / பெண்) பணி - இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து
மாதச் சம்பளமாக ₹2 இலட்சம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு
ஜெர்மனி
நாட்டில் பணிபுரிய செவிலியர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு, விருப்பம் உள்ளவர்கள்
உடனடியாக விண்ணப்பிக்கலாம். ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு
ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி
ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு B1,B2 நிலையில் இலவசமாக
ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத சம்பளமாக சுமார் 2 இலட்சம் வழங்கப்படும். எனவே,
தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி,
அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில்
எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் omclgerman2022@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
15.03.2025 கொள்ளப்படுகிறார்கள். அனுப்பிவைக்குமாறு கேட்டுக் மேலும் ஊதியம் மற்றும்
பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in
மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து
கொள்ளலாம். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
No comments:
Post a Comment