முக கவசம் அணியாத ஊழியர்கள் மீது நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. அதேவேளையில் வைரஸ் பரவல் முழுமையாக குறையவில்லை. இருந்தபோதிலும் சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பல ஊழியர்கள் முக கவசம் அணிவதில்லை, சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிப்பதில்லை என்ற புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்துக்கு வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வருபவர்களை தலைமைச் செயலகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், முக கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!