ஜேஇஇ மெயின் தேர்வு: மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்? 


 2021-ம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வு பிப்ரவரி 23-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தேர்வெழுதும் மாணவர்களுக்கு என்டிஏ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

 பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜேஇஇ மெயின் 2021 தேர்வு, ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் ஆண்டுக்கு 4 முறை நடைபெறுகிறது. 

முதல் கட்டமாக பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ மெயின் 2021 தேர்வு நடைபெறும். 

ஒரே மாணவர் 4 முறையும் தேர்வை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 பிப்ரவரி மாதத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் கடந்த 11-ம் தேதி வெளியானது. இந்நிலையில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு, தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

 *தேர்வுக்குச் செல்லும்போது மாணவர்கள் உலோகப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. எவ்விதமான நகைகள், ஆபரணங்களையும் அணிவதைத் தவிர்க்க வேண்டும். 

 *தேர்வு மையத்தில் மின்னணு கடிகாரங்கள் அனுமதிக்கப்படாது. 

 *மதச் சின்னங்களை அணியும் தேர்வர்கள் கேட் மூடும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகத் தேர்வு மையத்திற்கு வந்து, அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். 

 *தேர்வர்கள் மதச் சின்னங்கள் அல்லாது, தங்களது தலையைத் தொப்பி, துப்பட்டா போன்றவற்றால் மறைக்கக் கூடாது. *கைப்பைகள், மின்னணுப் பொருட்கள், தகவல் தொடர்பு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

 *உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. *தொற்றுக் காலத்தில், சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி மாணவர்கள் முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் சானிடைசர்களைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கூடுதல் விவரங்களைக் காண: .

USE DOWNLOAD BUTTON TO GO THE JEE WEBSITE

You have to wait 25 seconds.

Download Timer

Post a Comment

أحدث أقدم

Search here!