கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, வங்கி வேலை நேரத்தை, காலை, 10:00 முதல், பிற்பகல் 2:00 மணி வரை குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

மாநில வங்கியாளர்கள் குழுமத்திற்கு, அந்த சங்கம் அனுப்பிய கடிதம்:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை தடுக்க, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 
இதையும் படியுங்கள்   
இவற்றை வங்கி கிளைகளிலும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி கிளைகளில் அவற்றை பின்பற்ற போதிய வசதிகள் இல்லை. வங்கி ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதை தடுக்க, வங்கி வேலை நேரத்தை, மீண்டும் குறைக்க வேண்டும். இதன்படி, காலை, 10:00 முதல், பிற்பகல், 2:00 மணி வரை, வங்கி கிளைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை, 50 சதவீத சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்த வேண்டும். 
இதையும் படியுங்கள்   
குறிப்பிட்ட பகுதிகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருந்தால், ஆலோசனைக்கு பின் தேர்வு செய்து, அவை செயல்பட அனுமதிக்க வேண்டும்.வங்கி ஊழியர்களின் நலன் கருதி, உறுப்பினர் வங்கிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் உரிய முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!