சென்னை, கோவை, திருச்சியில் வாக்களிக்க செல்லும் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகன வசதி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் 


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஜனநாயக உரிமையை மக்கள் நிறைவேற்றுவதற்கும், ஜனநாயகக் கடமையை செயல்படுவத்துவதற்கும் ஏதுவாக முதியோர்கள் (80 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தங்களது இல்லத்தில் இருந்து வாக்களிக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று, மீண்டும் வீடு திரும்புவதற்கு இலவச சவாரி சேவையை தர ‘ஊபர்' நிறுவனம், இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளது. 

எனவே இலவச சவாரி சேவையை சென்னை, திருச்சி மற்றும் கோவை ஆகிய நகரங்களில் ‘ஊபர்' நிறுவனம் வழங்க உள்ளது. மேற்கண்ட வாக்காளர்களுக்கு அவர்களது வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு சென்று திரும்பும் வகையில், இலவச சவாரியானது, குறைந்தபட்சம் 5 கி.மீ தூரத்திற்கு உட்பட்டு பயண கட்டண அளவில் ரூ.200 வரை 100 சதவீத கட்டண தள்ளுபடியுடன் அளிக்கப்படும். 

சவாரி செய்பவர்கள் செல்போன் மூலம் 'ஊபர்' செயலி (அப்ளிகேசன்) வழியாக இலவச சவாரிக்கு முன்பதிவு செய்ய வேண்டும். எனவே 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோர் விருப்பத்தின் பேரில், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم

Search here!